Wednesday, March 25, 2009

few kadi jokes,quotes in tamil

Got this forward from my friend !!!


==================================================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
==================================================

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

==================================================

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்;
நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள்.
கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
==================================================

நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.

தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.

என்ன பாக்கறே?

எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும், என் நண்பா.

No No அழக்கூடாது Control yourself.

==============================

ஒரு சிறு கவிதை:

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியது
மெழுகுவர்த்தி.

==============================

நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா.
நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.

==============================

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.

==================================================

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

=============================================

No comments: